கட்டுப்பாட்டு விலையை மீறும் மருந்தகங்களுக்கு எதிராக சுற்றிவளைப்பு

Wednesday, November 9th, 2016

கட்டுப்பாட்டு விலையை மீறி மருந்துகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள் குறித்து சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருவதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

மக்களிடம் இருந்து வரும் முறைப்பாடுகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.  கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். அண்மையில், கட்டுப்பாட்டு விலையை மீறி மருந்து விற்பனை செய்யும் மருந்தகங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை வழங்க, சுகாதார அமைச்சினால் விஷேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதன்படி, 011 307 10 73 அல்லது 011 309 22 69 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்வதன் மூலமோ 011 268 61 13 என்ற பெக்ஸ் இலக்கத்திற்கு தகவல் அனுப்புவதன் மூலமோ மக்கள் தமது முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

palithamahipala

Related posts: