இந்தியாவிலிருந்து 30 ஆம் திகதி நாடு திரும்பும் முன்னாள் ஜனாதிபதி ரணில்!
Tuesday, November 26th, 2024
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 30ஆம் திகதி நாடு திரும்ப உள்ளார்.
இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் இந்தோரில் சத்திய சாய் வித்தியா விஹார் உயர் கல்வி நிறுவனத்தின் நிகழ்வு ஒன்றில் பங்குபற்றுவதற்காக அவர் இவ்வாறு இந்தியா சென்றுள்ளார்.
இந்த விஜயத்தில் ரணில் விக்ரமசிங்கவுடன் அவரது துணைவியாரான மைத்திரி விக்ரமசிங்கவும் இணைந்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட சொற்பொழிவொன்றை ஆற்ற உள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 30ஆம் திகதி நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகின்றது.
000
Related posts:
யாழ்ப்பாணத்திலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்தி...
இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தின் தீர்மானம் – வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கடும் எதிர்ப்பு...
மக்களுக்காக புதிதாக அறிமுகமாகவுள்ள ஓய்வூதிய முறைமை - இராஜாங்க அமைச்சர் அனுபம பெஸ்குவல் அறிவிப்பு!
|
|
|


