கட்டுநாயக்க விமானநிலைய ஓடுபாதை சர்வதேச தரத்திற்கு அமைய மறுசீரமைக்கப்படும் -அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா

Friday, December 23rd, 2016

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை சர்வதேச தரத்திற்கு அமைய மறுசீரமைக்கப்படவுள்ளதாக போக்குவத்து மற்றும் சிவில் விமானச்சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்காக  செலவிடப்படும்  தொகை 720 கோடி ரூபாவாகும். மறுசீரமைப்பு  பணிகள் அடுத்த மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த பணிகளை ஏப்ரல் மாதம் 5ம் திகதி பூர்த்தி செய்வது இலக்காகும். இதனால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம்   ஐந்தாம்  திகதி  வரை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

aireport-415x260

Related posts: