2019 உலகக் கிண்ணம் : இலங்கையின் ஒளிபரப்பு உரிமம் ரூபவாஹினிக்கு!
Friday, May 24th, 2019இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ண ஒருநாள் போட்டித் தொடரினை இலங்கையில் உத்தியோகபூர்வமாக ஒளிபரப்ப இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ICC) அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அதனிடையே இலங்கையில் வானொலி ஒலிபரப்பு பங்குதாரிகளாக சித எப்.எம். இற்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், போட்டிகளின் விசேட தருணங்களை ஒளிபரப்ப (Video Clips) ‘த பபரே’ இணையத்தளத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இம்முறை உலகக் கிண்ண போட்டிகள் மே 30ஆம் திகதி முதல் ஜூலை 14ஆம் திகதி வரை இங்கிலாந்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பணிகளை செய்ய இடையூறுகள் உள்ளதாக அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் முறையீடு செய்ய தீர்மானம்!
நாட்டின் புகையிரத சேவைகளை மேம்படுத்த திட்டம்!
புதிய அரசியல் அப்மைப்பு: சுகாதார சேவைக்கு பேராபத்து!
|
|