வெளிநாடு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்!
Sunday, September 11th, 2022வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்வதற்கான இலங்கையர்களின் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 8 ஆயிரத்து 772 இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு வெளிநாடு செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்களாவர். மேலும் ஒரு இலட்சத்து இருபத்தி ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் வெளிநாடு சென்றுள்ளனர்.
இதேவேளை, இவ்வருடத்தில் இதுவரை 2 ஆயிரத்து 858 இலங்கையர்கள் தென்கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளனர்.
மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 5 ஆயிரம் தொழிலாளர்களை கொரியாவுக்கு வேலைக்கு அனுப்ப எதிர்பார்த்திருப்பதாக பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
0000
Related posts:
மேலும் 1595 முகாமைத்துவ உதவியாளர்களை உள்வாங்க அமைச்சு அனுமதி!
அமெரிக்க குடிவரவு குடியகல்வு கொள்கையில் மாற்றம்!
இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில் ஆர்வம் காட்டும் சினோபெக் நிறுவனம் - வெளிவிவகார அ...
|
|