யாழ். குடாநாட்டின் சில இடங்களில் இன்றும் மின்தடை! 

Thursday, October 6th, 2016

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை(06) காலை-08.30 மணி தொடக்கம் பிற்பகல்-05.30 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தெல்லிப்பழை, காங்கேசன் துறை கரிசன் ஐந்தாவது பொறியியல் படை முகாம், காங்கேசன் துறை வடக்குக் கடற்படை முகாம், பலாலி இராணுவத் தலைமைக் காரியாலயம், பலாலி விமானப் படை ஓய்வு கால விடுதி, மயிலிட்டி கரிசன் ஐந்தாவது பொறியியல் படை முகாம், பாலாலி இலங்கை விமானப்படை முகாம், மயிலிட்டி கரிசன் 5 ஆவது பொறியியல் படை முகாம்(புதியது), உடுப்பிட்டி வி.சி. நாச்சிமார் கோவிலடி, இலந்தைக் காடு, கொற்றாவத்தை, பொலிகண்டி ஆலடி, நெடியகாடு, வல்வெட்டித் துறை வெள்ள றோட், உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, உடுப்பிட்டி நாவலடி, வன்னிச்சி அம்மன் கோவிலடி, கம்பர் மலை பாரதி தாசன் வீதி, பழைய பொலிஸ் நிலையம், உடுப்பிட்டி வாசிகசாலை, பொக்கணைச் சந்தி, கெருடாவில், தொண்டைமானாறு, மயிலியதனை, சிதம்பரா, வறுத்தலை விளான், டச்சு வீதி ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

power

Related posts: