குறுந்தகவல் மூலமாக இந்து ஆலய விடயங்களை அறிந்துகொள்ளக் கூடிய சேவை முறை தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தினால் அறிமுகம்!
Thursday, December 7th, 2023இலங்கையில் உள்ள இந்து ஆலயங்களின் வரலாற்றில் முதன்முறையாக குறுந்தகவல் மூலமாக ஆலய விடயங்களை அறிந்துகொள்ளக் கூடிய சேவை முறையானது தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தினால் நேற்று (6) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேவஸ்தானத்தின் தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட இச் சேவையின் மூலம் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தினால் ஆற்றப்பட்டு வரும் பல்வேறு சமூக நலத்திட்ட பணிகள், ஆலய விசேட உற்சவங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய முழுமையான விபரங்களை எவ்வித கட்டண அறவீடுமின்றி இலவசமாக அறிந்து கொள்ள முடியும்.
குறித்த சேவையினை பெற்றுக் கொள்வதற்கு கீழ்வரும் முறை மூலம் இணைந்துகொள்ள முடியும்
https://www.tellidurga.org என்ற தேவஸ்தானத்தின் இணையத்தள முகவரிக்கு சென்று தங்களுடைய தொலைபேசி இலக்கங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.
(தொலைபேசி இலக்கங்களை உறுதிப்படுத்தும் நோக்கில் OTP முறை (One-Time Passwords Authenticate System) பயன்படுத்தப்பட்டுள்ளது
Related posts:
|
|