பூநகரி பிரதேசத்திற்கு ஜனாதிபதி விஜயம் – நகர அபிவிருத்தி தொடர்பில் மீளாய்வு!

Saturday, January 6th, 2024


நான்கு நாள் விஜயமாக வடமாகாணத்திற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (05) பிற்பகல் பூநகரி பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.

இந்நிலையில், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட பூநகரி நகர அபிவிருத்தித் திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.

அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூநகரி கோட்டையை பார்வையிட்டதுடன்,  பூநகரி பிரதேசத்தில் இயங்கிவரும் உயர்தர முந்திரி உற்பத்தி நிறுவனமான ‘வன்னி கெசு’ முந்திரி உற்பத்தி நிறுவனத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்து அதன் செயற்பாடுகளையும் அவதானித்திருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Related posts: