ஓய்வு பெற்ற 50 படை வீரர்கள் பேருக்கு தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்!

Wednesday, October 12th, 2016

தொழில்நுட்ப அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற படை வீரர்கள் 50 பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன.

ஓய்வு பெற்ற படை வீரர்களின் மனித வளத்தை தேசிய அபிவிருத்திக்காகப் பயன்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக, தொழில்நுட்ப அதிகாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

ஓய்வு பெற்ற படை வீரர்களின் அறிவு மற்றும் அனுபவங்களை தேசிய பொருளாதார அபிவிருத்திக்குப் பயன்படுத்தல் மற்றும் படை வீரர்களின் நலன் என்பன இதன் நோக்கம் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

படை வீரர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை என அரசாங்கத்தின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், கடந்த காலங்களிலிருந்த அனைத்து அரசாங்கங்களையும் விட, அவர்களின் நலன் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டார்.

president-3

Related posts: