எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை எந்தவொரு வெளிநாட்டு கடனையும் செலுத்தாமல் இருந்ததில்லை – அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிப்பு!
Tuesday, December 21st, 2021இலங்கை எதிர்நோக்கி வரும் டொலர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கில் சீன அரசாங்கம் 1.5 பில்லியன் டொலர்களை வழங்க உள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச ரெிவித்துள்ளார்.
கடன் செலுத்துகைக்காக சீனா இவ்வாறு கடனுதவி வழங்குவதாகவும் அவ்வாறு கிடைக்கப்பெற்றால் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிட்ச் ரேடிங் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள தரப்படுத்தல் ஓர் எதிர்வு கூறலே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஆண்டில் இலங்கை கடன் செலுத்துகையில் சிரமங்களை எதிர்நோக்கும் என பிட்ச் ரேடிங் நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் இலங்கை எந்தவொரு வெளிநாட்டு கடனையும் செலுத்தாமல் விட்டதில்லை எனவும் அமைச்சர் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
பரீட்சைப் பெறுபேற்று சான்றிதழை இணையத்தினூடாக வழங்க நடவடிக்கை!
தபால் மூலம் வாக்களிப்பு: அடையாள அட்டையை சமர்பித்தல் அவசியம் -- தேர்தல்கள் ஆணைக்குழு!
மனித உரிமைகள் குறித்து பேசுவதற்கு முன்னர், மனிதன் ஒருவன் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது முக்கியமாக...
|
|