சிங்கப்பூரில் இருந்து எரிபொருளுடன் வந்தடைந்தது கப்பல் – நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் கிடையாது என இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, November 18th, 2021

சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்ததுள்ளது.

இதேவேளை மேலும் 36 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு எண்ணெய் தாங்கி இன்று (18) இலங்கைக்கு வரவுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நாளை 19ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வந்த கப்பலின் மூலம் கொண்டுவரப்பட்ட 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் இறக்கும் பணி நேற்று 17ஆம் திகதி ஆரம்பமானதுடன், இந்த பணிகள் சுமார் இரண்டு நாட்களில் நிறைவடையும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனால், நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என்று தெரிவித்துள்ள அவர்  யாரும் எரிபொருளை வீட்டில் இருப்பு வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: