அடுத்த வருடம் முதல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்!

Sunday, November 19th, 2017

புலம்பெயர் தேசங்களில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் மூலமான கொடுப்பனவுகள் அடுத்தவருடம் வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நிதி அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கான உத்தேச ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதமளவில் கொடுப்பனவுகளை வழங்கக்கூடியதாக இருக்குமென்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் தம்மை பதிவு செய்து கொண்டு வேலைவாய்ப்புகளுக்காக சென்ற இடத்தில் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட 38 பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது ஒரு கோடி ரூபாவுக்கு மேலான தொகை இழப்பீடாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: