இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்களை வழங்க உலக வங்கி அனுமதி!

Thursday, June 29th, 2023

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கும் திட்டத்துக்கு உலக வங்கி அனுமதி அளித்துள்ளது.

இதன்படி இலங்கைக்கான பாதீடு மற்றும் நலன்புரி திட்டத்திற்கு ஆதரவாக 700 மில்லியன் அமெரிக்க டொலரை உலக வங்கி வழங்கவுள்ளது.

நிதியில் சுமார் 500 மில்லியன் டொலர், பாதீட்டு ஆதரவிற்காக ஒதுக்கப்படும், மீதமுள்ள 200 மில்லியன் டொலர் நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நலன்புரி ஆதரவிற்காக ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: