நுண்கடன் திட்டத்தால் வடக்கு, கிழக்கில் 78 பேர் உயிரிழப்பு!
Saturday, June 9th, 2018
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நுண்கடன் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட 78 பேர் இதுவரையில் இறந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற மற்றும் சிவில் சமூக சம்மேளத்தின் தலைவர், என்டனி கெலிசியஸ், கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனை தெரிவித்துள்ளார்.
நுண்கடன் திட்டத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக அரசாங்கம் தெரிவித்துவருகின்ற போதிலும், அதற்கான நிலையான திட்டம் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
யாழின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை
வடக்கில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களில் 14 பேர் குணமடைந்துள்ளனர்- யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாள...
சர்வதேச தொழில்நுட்பத் துறை முடங்கலால் ஏற்பட்ட சேவை பாதிப்புகள் வழமைக்கு!
|
|
|


