அபாயகரமான சாலை விபத்துக்களைக் குறைப்பதற்காக இன்றுமுதல் வாகனங்களின் டயர்களின் தரம் குறித்து சோதனை – பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன அறிவிப்பு!

Monday, March 22nd, 2021

நாட்டில் இன்றுமுதல் வாகனங்களின் டயர்களின் தரம் குறித்து, ஆய்வு செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்..

அதனடிப்படையில் இலங்கையில் அதிகரித்துவரும் அபாயகரமான சாலை விபத்துக்களைக் குறைப்பதற்காக வாகனங்களின் டயர்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை வீதி விபத்துக்கள் காரணமாக நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் எட்டு இறப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் தினமும் ஒன்பதுமுதல் பத்து இறப்புகள் பதிவாகின்றதாகவும் சுட்டிக்காட்டிய அவர், அதே நேரத்தில் 30 முதல் 40 நபர்கள் பொறுப்பற்ற வாகனம் ஓட்டுதல் மற்றும் தரமற்ற வாகனங்களின் பயன்பாடு காரணமாக காயங்களுக்கு ஆளாகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில் அதிகாரிகள் இன்றுமுதல் வாகனங்களின் டயர்களை ஆய்வு செய்யும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..

மேலும் தரமற்ற டயர்களுடன் வாகனங்களை ஓட்டும் நபர்களுக்கு. 3,500 ரூபா அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தெரிவித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹானா  தகுதியற்ற வாகனங்களை செலுத்தி, காயங்களை ஏற்படுத்துபவர்களுக்கு 25,000 ரூபா அபராதம் விதிக்கப்படலாம் என்றுமு; தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: