ஓய்வு பெற்ற ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு!
Wednesday, February 13th, 2019ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீண்டும் சேவைக்கு இணைத்துக் கொள்வது தொடர்பில் அண்மையில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வெளியிட்ட கருத்துக்கு வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பின்தங்கிய பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்படும் எனவும் கல்வி அமைச்சர் கூறியிருந்தார்.
இதற்கு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர், தமது சங்கம் அதற்கு எதிர்ப்பை தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
ஆசிரியர்களுக்காக பரீட்சை எழுதி சித்தி பெற்ற 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது வேலையற்றுள்ளனர். இந்நிலையில், அமைச்சர் இவ்வாறான ஒரு முடிவை எடுப்பது சிறந்தது அல்லவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நிவாரணம் - கல்வியமைச்சர் !
நிபந்தனை அடிப்படையில் எம்முடன் எவரும் அரசியல் நடத்த முடியாது - தமிழ்க் கூட்டமைப்பினர் ஏகப் பிரதிநிதி...
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம்...
|
|