ஒரே தடத்தில் இரண்டு தொடருந்துகள் சாதுரியமான முயற்சியால் விபத்து தவிர்ப்பு- கோண்டாவிலில் சம்பவம்!

Tuesday, October 16th, 2018

இரண்டு தொடருந்துகள் ஒரே தடத்தில் வந்துள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று மோதிப் பெரும் விபத்து ஏற்படும் நிலமை, தொடருந்து நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் சாதுரியமான நடவடிக்கையால் தடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் கோண்டாவில் தொடருந்து நிலையத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட தபால் தொடருந்தும் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி வந்த கடுகதி தொடருந்தும் கோண்டாவில் தொடருந்து நிலையத்துக்கு அண்மையில் ஒரே தடத்தில் பயணித்துள்ளன.
இதனை அறிந்த தொடருந்து நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரி துரிதமாகச் செயற்பட்டு கொழும்பு நோக்கிச் சென்ற தபால் தொடருந்தை நிறுத்துமாறு பணித்துள்ளார். அந்தத் தொடருந்து கோண்டாவில் தொடருந்து நிலையத்திலிருந்து சில மீற்றர்கள் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து வந்த தொடருந்து கோண்டாவில் தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டு தடம் மாற்றப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சுமார் அரை மணி நேர தாமதத்தின் பின்னர் இரண்டு தொடருந்தும் தமது பயணங்களைத் தொடர்ந்தன.

Related posts: