எதிர்வரும் வருடம் முக்கிய அனைத்து தேர்தலும் நடத்தப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
Saturday, December 9th, 2023
எதிர்வரும் வருடம் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தல்கள் புதிய அரசியலமைப்பை திருத்துவது அல்லது உருவாக்குவது பற்றி ஆராய உதவும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்களை நேற்று சந்தித்த போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அச்சமோ சந்தேகமோ இன்றி, அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம உரிமையுடனும் அமைதியாக வாழக்கூடிய இலங்கையைப் பற்றிய “இமயமலைப் பிரகடனம்” இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட 06 முக்கிய விடயங்களை “இமயமலைப் பிரகடனம்” உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


