எதிர்த்து வாக்களித்தது ஈ.பி.டி.பி – யாழ் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு 5 மேலதிக வாக்குகளால் தோல்வி!

Wednesday, December 2nd, 2020

தமிழரசு கட்சியின் ஆளுகைக்குட்பட்ட யாழ் மாநகர சபை வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன்களை முன்னிறுத்தியதாக அமையாது ஒருசிலரின் சுயநலன்கருததியதாக முன்மொழியப்பட்டமையால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டுக்கான யாழ் மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் இன்றையதினம் மாநகரின் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்டினால் சபையில் சமர்பிக்கப்பட்டது.

சாமர்ப்பிக்கப்பட்ட பாதீடு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் குறைபாடுகளையும் முன்வைத்த சபையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்ற நிலையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது

45 உறுப்பினர்களை கொண்ட யாழ் மாநகரசபையில் தமிழரசு கட்சி 16 உறுப்பினர்களைம் தமிழ் தேசிய முன்னணி 13 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 10 உறுப்பினர்களையும் ஐக்கியதேசிய கட்சி 3 உறுப்பினர்களையும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி 1 ஆசனங்களையும் தமிழர் விடுதலை கூட்டணி 1 ஆசனத்தையும் கொண்டுள்ளன.

இந்நிலையில் குறித்த வாக்கெடுப்பில் ஆதரவாக தமிழரசு கட்சியும் அதன் பங்காளிகளான ஐக்கிய தேசிய கட்சியும் வாக்களித்திருந்தனர். எதிராக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி , தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஶ்ரீலங்கா சுதந்தரி கட்சி ஆகியன வாக்களித்திருந்தனர்.

இதையடுத்து யாழ் மாநகரின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஐந்து மேலதிக வாக்குகளால்   தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: