7ஆம் திகதிக்குள் வாக்­காளர் பெயர்ப் பட்­­டி­யலைகளை கையளிக்கவும் – மஹிந்ததேசப்பிரிய!

Friday, July 29th, 2016

பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட வாக்­காளர் பெயர் பட்­­டி­யலை எதிர்­வரும் 7 ஆம் திக­திக்கு முன்னர் கிராமசேவக­ரிடம் கைய­ளிக்­கு­மாறு தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித் தார்.

இளை­ஞர்­களின் தேர்தல் அறிவு மற்றும் பங்­கேற்பை வலு­வூட்­டும்­வ­கை யில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்­திட்டம் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தும் செய்தியாளர் சந்­திப்பு நேற்று தேர்­தல்கள் ஆணைக்­குழு செய­ல­கத்தில் இடம்­பெற்­றது. அதன்போது கருத்­து­தெ­ரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இது­தொ­டர்­பாக அவர் மேலும் கூறு­கையில், இந்த வரு­டத்­துக்­கான வாக்­காளர் பெயர் பட்­டியல் எதிர்வரும் ஒக்­டோபர் மாதம் பட்­டி­ய­லி­டப்­ப­ட­வுள்­ளது. ஆகை­யினால் வாக்­காளர் பெயர் பட்டியல் கிடைத்­த­வர்கள் அதனை பூர­ணப்­ப­டுத்தி ஆகஸ்ட் 7ஆம் திக­திக்கு முன்னர் கிராமசேவ­க­ரிடம் கையளிக்க வேண்டும். அவ்­வாறு தங்கள் வாக்­காளர் பெயர் பட்­­டி­யலை சேகரிப்­ப­தற்கு கிரா­ம­சேவகர் வரா­விட்டால் அந்த பிர­தே­சங்­க­ளுக்கு கிரா­ம­சே­வகர் ஊடா­கவோ நேர­டி­யா­கவோ அந்­தந்த மாவட்­டங்­களின் வாக்­காளர் பெயர் பட்­­டி­யலை சேக­ரிப்­ப­தற்கு எமது அதி­கா­ரிகள் வரு­வார்கள்.

அத்­துடன் மண்­ச­ரிவு மற்றும் வெள்ள அனர்த்­தத்தில் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­க­ளான சீதா­வக்க, கடு­வல, கொலன்­னாவ, வத்­தளை, பிய­கம களனி, அர­நா­யக்க, புளத்­கொ­ஹு­பிட்­டிய மற்றும் எட்­டி­யாந் ­தோட்டை ஆகிய 9 பிர­தேசங்­களில் வாக்­காளர் பெயர் பட்­­டியல் சேக­ரிப்­பதில் சிறிது தாமதம் ஏற்­ப­டலாம்.

மேலும் வாக்­காளர் பெயர் பட்­டியல் கிடைக்­கா­த­வர்­க­ளுக்கு வாக்­காளர் கணக்­கிடும் பத்­திரம் ஒன்றை எமது அலு­வ­லக இணை­யத்தில் இருந்தோ அல்­லது கிரா­ம­சே­வகர் அலு­வ­லகம் மற்றும் பத்­தி­ரி­கை­யி­னூ­டாக பெற்­றுக்­கொள்ளும் வகையில் நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­கின்றோம் என்றார்.

Related posts: