ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைதானோர் தொகையும் 70 ஆயிரத்தை நெருங்கியது – பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல்!

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின்பேரில் கடந்த 24 மணி நேரத்தில் 669 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சோதனை நடவடிக்கைகளின்போது 38 வாகனங்களும் பொலிசாரின் கட்டுப்பாட்டின்கீழ் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இதேநேரம் ஊடரங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் நாட்டில் இதுவரை 69 ஆயிரத்து 957 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பொலித்தீன் பாவனைக்கான தடை கடுமையாக்கப்பட்டுள்ளது!
நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!
இலங்கை - இந்திய கடற்படைகளுக்கு இடையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இணக்கம் !
|
|