எரிவாயுவின் விலை அதிகரிக்கவில்லை – அமைச்சு அறிவிப்பு!

Tuesday, August 28th, 2018

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படுவதாக வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

12.5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 158 ரூபாயால் அதிகரிக்கப்படுவதாக கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியிடப்பட்டது.

எனினும் அவ்வாறான விலை மாற்றத்துக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அனுமதியளிக்கவில்லை என அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலையை 158 ரூபாயால் அதிகரிக்குமாறு விநியோக நிறுவனங்கள் கோரியிருந்தன. எனினும் விலை ஏற்றத்துக்கான அனுமதி வழங்கப்படவில்லை என்று வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக மேலும் தெரிவித்தார்.

இதேவேளை 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 154 ரூபாய் இழப்பு ஏற்படுவதாக விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Related posts: