உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் – அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவிப்பு!

Wednesday, July 7th, 2021

உள்ளுராட்சி மன்றங்களில் ஒப்பந்த, சமயாசமய, பகுதிநேர அடிப்படையில் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களில் தற்சமயம் நிரந்தர நியமனம் பெறாத, 8 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான யோசனையை நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொர்பாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் மேலும் தெரிவிக்கையில் இவர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு பிரதமர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

மக்கள் நலனை முன்நிலைப்படுத்தி செயல்படும் அரசாங்கம் என்ற ரீதியில் எந்தவொரு சவால் ஏற்பட்டாலும், மக்களுக்காக தீர்மானம் எடுக்க அரசாங்கம் பின்நிற்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: