வேலைநிறுத்த மருத்துவர்களுக்கு எரிபொருள் இல்லை!
Sunday, May 7th, 2017மாலபே ,சைட்டம் தனியார் மருத்துவமனையை மூடிவிடுமாறு அரசுக்கு அழுத்தம் கொடுத்து அரசமருத்துவ அதிகாரிகள் மேலும் சிலமுக்கிய தொழிற் சங்கங் களுடன் இணைந்து முன்னெடுத்திருந்த ஒருநாள் நாடளாவிய ரீதியிலான வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றகடந்த 5 ஆம் திகதி ஒருசில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மருத்துவர்களது வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.
“வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவது கிடையாது” எனமேற்படி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அறிவிப்பு பலகைகள் தொங்க விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ரக்பி விரர் தாஜூடீன் கொலை: முன்னாள் சட்டவைத்திய அதிகாரியும் கைதாகலாம்!
மழையுடனான வானிலை மேலும் அதிகரிப்பு – வானிலை அவதான நிலையம்!
மூடப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை - கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.தி...
|
|