இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்வுள்ளார் ஜனாதிபதி!
Sunday, September 18th, 2016
இந்திய கோவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இரண்டு முக்கிய பொருளாதாரத்துறை கூட்டங்களில் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளார்.
இதில் ஒரு கூட்டம் வங்காள விரிகுடாவின் பன்முக வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பினால் (BIMSTEC) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது கூட்டம், பிரேசில் ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டான (BRICS) பிரிக்ஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ஒக்டோபர் 18ம் திகதியன்று இலங்கையில் இருந்து புறப்படுகிறார்.

Related posts:
உயரமான நத்தார் மர பணிகள் மீள ஆரம்பம்!
சம்பந்தன் கூறிவருவது அனைத்தும் பச்சைப் பொய் என்கிறார் கஜேந்திரகுமார்!
அதானி நிறுவனத்தின் முதலீடுகள் இலங்கைக்கு முக்கியமானவை - இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த ...
|
|
|


