அடுத்த வாரம் பேருந்து கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும் அமைச்சரவை பத்திரம்!

Friday, June 16th, 2017

பேருந்து கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும் அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரமளவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக நிதியமைச்சினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

பேருந்து கட்டணங்களில் திருத்தம் செய்வது சம்பந்தமான தேசிய கொள்கைக்கு அமைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 01ம் திகதி கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதன்படி அடுத்த மாதம் முதல் தற்போது நடைமுறையில் உள்ள பேரூந்து கட்டணங்கள் 6% அதிகரிக்கப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.

Related posts:


2025 ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி – ஜனாதிபதி நடவடிக்கை!
முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்து தூக்கிக் கொண்டு செல்வதை நிறுத்துங்கள் - பொலிஸ் மா அதிபர் அவசர உ...
பிரதேச ஊடகவியலாளர்களின் நலன்களை முன்னிறுத்தி ஊடக ஆணைக்குழு உருவாக்கப்படும் - ஜனாதிபதி அறிவிப்பு!