உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வசந்தகால கூட்டங்களில் சீன உயர் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என அறிவிப்பு!
Tuesday, April 11th, 2023வொஷிங்டனில் நடைபெறும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வசந்தகால கூட்டங்களில் சீனாவின் உயர் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சீன மக்கள் வங்கியின் ஆளுநரான யி கேங், துணை ஆளுநருடன் இந்த வாரம் கூட்டங்களில் கலந்துகொள்வார் என்று அந்த நாட்டு மத்திய வங்கி ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் நிதியமைச்சர் லியு குன்னும் இந்த வாரம் வொஷிங்டனுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்போது சாம்பியா, இலங்கை மற்றும் கானா போன்ற நாடுகளின் கடன்கள் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாணவர்களுக்கான புதிய ஆயுள் காப்புறுதித்திட்டத்தை நடைமுறைப்படுத்த இரண்டு குழுக்கள்!
கடன் மறுசீரமைப்பு முறை ஏப்ரல் மாதத்திற்குள் அறிவிக்கப்படும் - மத்திய ஆளுநர் தெரிவிப்பு!
யாழ் மாவட்ட பனை - தென்னை வள கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
|
|