உயிரிழப்புக்கள் மேலும் 50 ஆயிரத்தை தாண்டும் – கவலை வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு!
Friday, April 3rd, 2020
2019 வருட இறுதியில் சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக உலக நாடுகளிலும் பரவ ஆரம்பித்து இன்று வரையில் பாதிப்படைந்தோரின் என்ணிக்கை 1 மில்லியன் ஆகவும் உயிரிழந்தோரின் என்ணிக்கை 50 ஆயிரத்தையும் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்றும் 1 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதுமே ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளை எச்சரித்தது.
வைரஸைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் உயிரிழப்பு அதிகம் ஏற்படும் என்றும் தெரிவித்தது.
ஆனாலும் தற்போது வைரஸ் தாக்குதலுக்கு ஏராளமானோர் பலியாகி வருவது குறித்து அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
Related posts:
நீதிமன்றின் உத்தரவையடுத்து வடமராட்சி கிழக்கில் அகற்றப்படுகின்றன சட்டவிரோத வாடிகள்!
ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திக்க தயாரில்லை - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
வறட்சியான வானிலை : நாடளாவிய ரீதியில் நீர் வழங்கல் பாதிக்கப்படும் – தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால...
|
|
|
தேவையேற்படின் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும் - இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவிப்பு!
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் 584 டொன் பிளாஸ்டிக் பொருட்கள் கடற்கரையில் இருந்து அகற்றம் - நகர அபிவிருத்...
எதிர்வரும் காலங்களில் இலங்கையில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரி கோப்பு திறக்கப்படும் -...


