உயிரிழப்புகள் அதிகரிக்கும் ஆபத்து – அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம்!
Friday, April 23rd, 2021
தீவிரகிசிச்சை பிரிவுகளில் அனுமதிக்க்பபடும் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும்அதிகரித்தால் கொரோனாவைரசினால் உயிரிழப்புகளும் அதிகரிக்கலாம் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம்தெரிவித்துள்ளது.
அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனாவைரசினை கட்டு;ப்படுத்த தவறினால் இன்னொரு முடக்கல் நிலைக்கோ அல்லது கடுமையான நடவடிக்கைகளிற்கோ வழிவகுக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணிவது சமூகவிலக்கலை கடைப்பிடிப்பது போன்ற சுகாதார நடைமுறைகளை பின்பற்றவேண்டியது பொதுமக்களின் கடமை எனஅவர் தெரிவித்துள்ளார்.
தீவிர கிசிச்சை பிரிவில் 35 கொரோனா வைரஸ் நோயாளிகளிற்கு சிகிச்சைவழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
அதிபர், ஆசிரியர்கள் நாளை சுகவீன லீவுப் போராட்டம்?
சமுர்த்தி பெண் உத்தியோகத்தரால் தற்கொலை செய்துகொண்ட குடும்பஸ்தர்: அநாதையாக்கப்பட்ட பிள்ளைகள்!
இலாபமீட்டும் பேருந்து சாலையாக மாற்றும் பொறுப்பை வடக்கு மக்கள் நிறைவேற்றுவார்கள் - அமைச்சர் பந்துல கு...
|
|
|


