இஸ்லாமிய பயங்கரவாதிகளே தற்கொலை தாக்குதல் மேற்கொண்டனர் – அரசாங்கம் அறிவிப்பு!
Monday, April 22nd, 2019இலங்கையில் நேற்று பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலை தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பு மேற்கொண்டதாக அமைச்சரும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தற்கொலை தாக்குதல் நடத்திய அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்களும் என்றும் அவர்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இலங்கையின் பல்வேறு பகுதியில் நேற்று நடத்திய தற்கொலை குண்டுத்தாக்குதலில் இதுவரை 290 உயிரிழந்ததுடன் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
Related posts:
தேர்தலில் குழறுபடிகளை தவிர்க்க தொகுதிவாரி முறையே உகந்தது -அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!
வெளிநாடுகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் காப்புறுதி பணத்தை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை - வெளிநாட்ட...
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து அபிவிருத்தியை நிலைநிறுத்துவது தொடர்பில் நிதி அமைச்சர் ...
|
|