விரைவில் நாகபட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை ஆரம்பம் – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவிப்பு!
Saturday, February 17th, 2024நாகபட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி மாத இறுதிக்குள் இச்சேவை ஆரம்பிக்கப்படுமெனவும், அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இதேவேளை தலைமன்னார்- இராமேஸ்வரம் கப்பல் சேவை முயற்சி தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கு தீர்வு கிடைக்குமெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சுமூகமான எல்லைக் கடப்புகளை உறுதிப்படுத்த இறங்குதுறை புனரமைப்பு, சுங்க மற்றும் குடிவரவு, குடியகல்வு வசதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் அவசியம் தொடர்பாகவும் அவர் இதன்போது கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஈஸ்டர் கொண்டாட்டத்துக்காக அதிகபட்ச பாதுகாப்பு உத்தரவாதம் - இராணுவ தளபதி அறிவிப்பு!
ஆசிரியர்களுக்கு சலுகைக் கடன் திட்டமொன்றை அமுல்படுத்த அரச வங்கிகளுடன் பேச்சு –கல்வி இராஜாங்க அமைச்சர்...
கடல் மாசுபாடு குறித்த இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்வு - மத்திய சுற்றாடல் அதிகார சப...
|
|