இலங்கை வந்தடைந்தார் இந்தோனேசிய ஜனாதிபதி!

Wednesday, January 24th, 2018

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ இன்று இலங்கை வந்தடைந்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பையேற்று வந்துள்ள இந்தோனேசிய ஜனாதிபதிக்கு இன்று மாலை ஜனாதிபதி செயலக வளவில் இராணுவ மரியாதை இடம்பெறவுள்ளது.இதனை தொடர்ந்து இலங்கை மற்றும் இந்தோனேசிய அரச தலைவர்களுக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

பிரமதர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்தோனேசிய ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் பொருளாதாரம் வர்த்தகம் உள்ளிட்ட விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது. நாளை இந்தேனேசிய ஜனாதிபதிக்கு பிரதமர் பகல்போசனம் வழங்கவுள்ளார்.

Related posts:

சினோபோர்ம் தடுப்பூசிக்காக செலவிட்ட தொகையை திருப்பிச் செலுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் - இராஜாங...
பாதீட்டில் உணவுக்கு உணவுக்கான நிவாரணம் கிடைக்கப்பெறும் - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தனிப்பட்ட அரசியலை விடுத்து அனைவரும் ஒன்றுபட வேண்டும் - அமைச்சர் ...