முரண்பாடுகளுக்கு உள்ளக பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண முடியும் அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, November 9th, 2021

அரசாங்கத்திற்குள் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு உள்ளக பேச்சுவார்த்தை ஊடாக மாத்திரமே தீர்வுகாண முடியும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கூட்டணி அரசாங்கத்திற்குள் பிரிவுகள் எழுந்துள்ள நிலையில் புத்தமத போதனைக்கு அமைய பங்காளி கட்சியினர் செயற்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

2019 இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது சர்வதேச மட்டத்தில் பெரும் சவாலையையும் தற்போதுவரை கொரோனாவையும் எதிர்கொள்வதை பங்காளிக் கட்சியினர் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புடனும் பொறுமையுடனும் செயற்படுவது அவசியம் என்றும் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அரசாங்கத்திற்குள் தற்போது தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகள் குறித்து மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: