இலங்கை பெண்களுக்கு ஓர்அரிய சந்தர்ப்பம்!

Friday, January 12th, 2018

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் ஜப்பான் MI  நிறுவனத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய இலங்கை பெண்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இதற்கமைவாக 18 க்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட யுவதிகள் ஜப்பான் மொழி தேர்ச்சியில் N4 தரத்துடன் அல்லது கல்வியை தொடர்ந்தவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

பாராமரிப்பு Caregiver பணிப்பெண் சேவையில் 100ற்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புகான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் இவர்களுக்கு மாதாந்தம் ஒரு இலட்சத்து 35ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் எனவும் இதற்கான விண்ணப்பங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விற்பனை பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்பப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை 0112791814 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுகொள்ள முடியும் என்று வெளிநாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

Related posts: