22 ஆம் திகதி நாடாளுமன்றம் வருகின்றது 20 ஆவது திருத்தம்!
Friday, September 18th, 202020 ஆவது அரசியலமைப்பு திருத்தம் முதலாம் வாசிப்பிற்காக எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்
முதலாம் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தம் முன்வைக்கப்பட்ட பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமாயின் 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டால் நீதிமன்ற செயற்பாடுகளுக்காக 3 வாரகாலம் வழங்கப்பட்டு நீதிமன்ற தீர்ப்பினை அடுத்தே இரண்டாம் வாசிப்பிற்காக அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தொழில் வல்லுனர்களுக்கு அரசியலமைப்பின் ஊடாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை - ஜனாதிபதி
மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை மீற முயற்சிப்பவர்கள் கைதாவர் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண...
முகநூல் ஊடாக ஏற்பாடான களியாட்ட நிகழ்வு : போதைப்பொருட்களுடன் பெண்கள் உட்பட பலர் கைது - சிரேஷ்ட பொலிஸ்...
|
|