மட்டக்களப்பில் இருந்து 310 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கடலில் நில அதிர்வு – சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அறிவிப்பு!
Monday, September 11th, 2023மட்டக்களப்பில் இருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் கடலில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை 1.29 க்கு ரிக்டர் அளவுகோளில், 4.65 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் வடக்கில் நிலையான கடற்றொழில் அபிவிருத்தி!
அனைத்து பாடசாலைகளும் திங்கட்கிழமைமுதல் ஆரம்பம் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
ஜனவரிமுதல் இலங்கையில் கட்டாயமாகிறது தடுப்பூசி அட்டை - அனைவருக்கும் புதிய QR குறியீடும் வழங்கப்படவுள்...
|
|