நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக நிறைவேற்றுவதற்கு திறைசேரி 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு!

Tuesday, May 7th, 2024

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக நிறைவேற்றுவதற்கு திறைசேரி 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

இந்த நிதியை பயன்படுத்தி 2 அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 100 நகரங்களுக்கான வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும், நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கும் 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரச நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்காக 400 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

000

Related posts: