வறண்ட வானிலை – அத்தியாவசிய நோக்கங்களுக்காக மட்டுமே குழாய் நீரைப் பயன்படுத்துங்கள் – நீர் வழங்கல் வாரியம் பொதுமக்களுக்கு அறிவுறுத்து!
Wednesday, February 19th, 2025
இந்நாட்களில் நிலவும் மிகவும் வறண்ட வானிலை காரணமாக, அத்தியாவசிய நோக்கங்களுக்காக மட்டுமே குழாய் நீரைப் பயன்படுத்துமாறு நீர் வழங்கல் வாரியம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது.
வாகனங்கள் கழுவுதல், தோட்டக்கலை போன்ற நடவடிக்கைகளுக்கு குழாய் நீரைப் பயன்படுத்தக்கூடாது என்றும், தற்போதைய சூழ்நிலையால் நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும், நிலவும் வெப்பமான வானிலை காரணமாக, நீர் நுகர்வு மிக அதிகமாக இருப்பதால், அதிக பகுதிகளில் உள்ள நீர் நுகர்வோருக்கு குறைந்த அழுத்த சூழ்நிலையில் நீர் விநியோகம் நடைபெறக்கூடும் என்றும் கூறப்படுகிறது
00
Related posts:
அமைச்சரவையில் மீன்பிடி அமைச்சிற்கு மேலதிக பொறுப்புக்கள்!
மாத்தளை சம்பவம்: எட்டு பேரினதும் உடலங்கள் மீட்பு!
நாட்டில் குளிரான காலநிலை தொடரும்!
|
|
|


