ஆகஸ்ட் மாத விடுமுறை இரத்து – நவம்பர் மாதம் இறுதி வரை பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு நடவடிக்கை!

Saturday, July 30th, 2022

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் விடுமுறை வழங்காது நவம்பர் மாதம் இறுதி வரை பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளைக் கருத்தில் கொண்டு தொடர்ச்சியான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை,  தரம் 3 மாணவர்களுக்கான பாடசாலைகளை நடத்துவதற்கான தேவைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வரும் அதேவேளை, தினசரி கல்வி நடவடிக்கைகளில் இருந்து தரம் 01 மற்றும் தரம் 02 ஐ தவிர்க்கவும் கல்வி அமைச்சு பரிசீலித்து வருகிறது

இதன்படி, தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: