இலங்கை அனைத்து நாடுகளும் பாடமாக இருக்க வேண்டும்!

Tuesday, September 13th, 2016

இலங்கை மலேரியா அற்ற நாடாக முன்னேறியுள்ளமையை அனைத்து நாடுகளும் பாடமாக எடுத்துச் செயற்பட வேண்டும் என  உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தினை உலக சுகாதார ஸ்தாபனத்தின் மலேரியா வேலைத்திடத்தின் பெட்ரோ எல் அலோன்சோ தெரிவித்துள்ளார்.1940 ஆண்டு இலங்கையில் மில்லியன் கணக்கான மக்கள் மலேரியா நோயினால்  பாதிக்கப்பட்டிருந்தனர்.  ஆனால் 1963 ஆம் ஆண்டு 17 மலேரியா நோயாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டனர்.

இலங்கை மலேரியா நோயை கட்டுபடுத்தும் செயற்பாட்டில் வெற்றிக்கண்டுள்ளது. இதன் பயனாக மலேரியா அற்ற நாடாக இன்று தன்னை உலகிற்கு அடையாளப்படுத்திக்கொண்டுள்ளது.

இதனை அனைத்து நாடுகளும் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என உலக சுகாதா ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

 who-logo1

Related posts: