இலங்கையில் புதிய ஹோட்டல்கள் நிர்மாணிப்பு!
Friday, July 13th, 2018
இலங்கையில் இன்னும் 200 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஹோட்டல்கள் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான ஹோட்டல்களின் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருகின்றதாக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில், இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையினால், 2.9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஹோட்டல்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், 8ஆயிரத்து 932 அறைகளுடன், 1.65 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஹோட்டல்கள் தற்போது இயங்கிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதுடன் கடல் வளங்களையும் அழிப்பதை கட்டுப்ப...
பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா பதவியிலிருந்து நீக்கம்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம் நியமனம்!
|
|
|


