புதிய அமெரிக்க தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பு – இருதரப்பு அரசியல், சமூக மற்றும் பொருளாதார உறவினை மேலும் பலப்படுத்தவும் இணக்கம்!

Saturday, March 5th, 2022

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சங்க் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து ஜுலி ஜே.சங்க் பிரதமரை சந்தித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இலங்கையுடன் காணப்படும் அரசியல், சமூக மற்றும் பொருளாதார உறவினை மேலும் பலப்படுத்தி, அந்த உறவை மேம்படுத்துவதற்கு தான் முயற்சிப்பதாக அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சங்க் இதன்போது தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரத்தை வலுவாக பேணுவதற்கு உதவுவதாக தெரிவித்த ஜுலி ஜே.சங்க் அவர்கள், இந்நாட்டின் வலுசக்தி மற்றும் சுற்றுலாதுறை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு உதவுவதாகவும் நம்பிக்கை வெளியிட்டார்.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையே காணப்படும் உறவை அவ்வாறே தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, புதிய பதவியில் வெற்றிகரமாக பணியாற்றுவதற்கு ஜுலி ஜே.சங்க் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஓகஸ்ட் முதலாம் திகதிமுதல் உக்காத இலன்ஸ் சீட் வகைகளை விற்பனை செய்ய மற்றும் பயன்படுத்த தடை - அமைச்சர் ...
கட்டாய முகக்கவசம் அணியும் சட்டம் இன்றுமுதல் அமுல் : மீறினால் பிடி ஆணை உத்தரவு இல்லாமல் கைது செய்யப...
மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் மீது பொலிஸ் நிலையத்தில் தாக்குதல் – மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப...