அத்தியாவசிய பொருட்கள் அடுத்த வாரம்முதல் நிர்ணய விலையில் விற்கப்படும் – அமைச்சர் பந்துல தெரிவிப்பு!

Monday, January 11th, 2021

அத்தியாவசிய பொருட்கள் பல நிர்ணய விலையில் அடுத்த வாரம்முதல் விற்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

வர்த்தக அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதை தெரிவித்துள்ளார்..

இதன்படி இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் ரூ.75, இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ரூ.130, 1கிலோ பச்சரிசி கெக்குலு ரூ.93, 1 கிலோ நாட்டரிசி ரூ.96 ஆகிய விலைகளில் விற்கப்படும்.

தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக சோயா எண்ணெயை அறிமுகப்படுத்த அமைச்சு எதிர்பார்க்கிறது. இது தேங்காய் எண்ணெயின் இறக்குமதி செலவைக் குறைக்கும் என அமைச்சர் கூறினார்.

சோயா உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை இலாபகர மாகவும் சலுகை விலையிலும் விற்க அமைச்சு ஓர் உடன்படிக் கைக்கு வரவுள்ளது.

மேலும் பிரித்தானிய இலங்கை கூட்டுதாபன(பி.சி.சி.) ஒத்துழைப் புடன் சலுகை வீதத்தில் சவர்க்காரத்தை சந்தைக்கு வழங்கவும் அமைச்சு எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: