இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய 11,552 பி.சி.ஆர் பரிசோதனைகள் – யாழ்ப்பாணத்திலும் சில பகுதிகள் முடக்கம்?

Thursday, October 29th, 2020

விடத்தல்பளையில் தனிமைப்படுத்தலில் தங்க வைக்கப்பட்டிருந்த தென்பகுதியைச் சேர்ந்த 37 பேருக்கும் நேற்று கொரோனா  தொற்றுறுதியாகியுள்ளது.

அதேநேரம், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த இருவருக்கும், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுறதியாகியுள்ளது.

குறித்த மூவரும் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்தநிலையில், தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் என யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதேவேளை, பொகவந்தலாவை – கொட்டியாகலை மத்திய பிரிவு தோட்டத்தில் கொரோனா தொற்றுறுறுதியான இரண்டு பெண்களும் மாத்தறை – கம்புரபிட்டிய தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பேலியாகொட மீன் சந்தைக்கு சென்று பொகவந்தலாவ பகுதிக்கு மீன் ஏற்றி வந்த பாரவூர்தியின் சாரதி ஒருவருக்கு ஞாயிற்றுக்கிழமை கொவிட் 19 தொற்றுறுதியானது. இதனையடுத்து அவரது குடும்பத்தை சேர்ந்த மேலும் இரண்டு பெண்களுக்கு தொற்றுறுதியானமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தகவல்படி நேற்று மட்டும் இலங்கையில் 11,552 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவே ஒரு நாளில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய எண்ணிக்கை என தெரிவிக்கப்படுகினிறது.

அந்தவகையில் இதுவரை 4 இலட்சத்து 80 ஆயிரத்து 838 பிசிஆர் சோதனைகள் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்ட்டவர்களுக்கு செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 9,205 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 5,111 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4075 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: