இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் வந்தடைந்தன!
Monday, October 25th, 2021இலங்கைக்கு மேலும் 3 இலட்சத்து 5 ஆயிரத்து 370 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன என இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் சட்டத்தரணி தினுச தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இந்தத் தடுப்பூசி தொகுதி நெதர்லாந்திலிருந்து கட்டார் ஊடாக இன்று திங்கட்கிழமை அதிகாலை நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், குறித்த தடுப்பூசி தொகுதி தற்போது இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நல்லூரின் பாதுகாப்புக்கு 500 பொலிஸாருடன் 25 பாதுகாப்பு கமராக்கள்!
திடமான அபிவிருத்தி நோக்கங்களை அடைவதில் இலங்கை மின்சார துறையின் பங்களிப்பு பாராட்டத்தக்கது - ஐக்கிய ந...
முன்பதிவு செய்யாமல் வருவதைத் தவிருங்கள் - சேவைகளை பெற்றுக்கொள்ள தரகர்களை நாடவேண்டாம் எனவும் மோட்டார்...
|
|