ரஷ்ய இராணுவ தளபதி –ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்திப்பு!
Thursday, February 6th, 2020
ரஷ்ய இராணுவ தளபதி சல்யுகோ ஒலேக் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.
கடந்த 3ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த அவர், 72ஆவது தேசிய சுதந்திர தின விழாவில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டார்.
ஜெனரல் ஒலேக்வுடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள ரஷ்ய இராணுவத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேநேரம், ரஷ்ய இராணுவ தளபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் நேற்று சந்தித்துள்ளார்.
இதன்போது இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி வழங்குவதற்கு ரஷ்ய இராணுவ தளபதி இணங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் கிளினிக் விவரங்கள் காட்சிப்படுத்தப்படும்!
ஊடக நிறுவனங்களுக்கும் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய தகவல்!
அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்துங்கள் - நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வருகின்றது சட்டம்!
|
|
|
மலையக ஆசிரிய உதவியாளர்களை உள்ளீருங்கள் - இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் கல்வி அமைச்சுக்குக் கடிதம்!
பரிசோதனையைத் தவிர்ப்பவர்களி வீடுகளை சீல் வைக்க நடவடிக்கை - மக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கடுமைய...
அஸ்வெசும மற்றும் சமுரத்தித் திட்டத்தை ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கோபா குழு கலந்துரையா...


