இராணுவத்தினரால் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Tuesday, May 14th, 2019இலங்கையில் தற்போது ஏற்பட்ட அவசர நிலைமை தொடர்பில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு பாதுகாப்பு சபை பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுனவர்த்தன மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சினால் வழங்கும் தகவல்களை மட்டும் நம்புமாறும், சமூக வலைத்தளங்கள் மற்றும் போலி குறுந்தகவல்கள் குறித்து அச்சப்பட வேண்டாம் எனவும் அவர் கேட்டுள்ளார்.
பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. படையினரின் செயற்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என பொது மக்களிடம் அவர் கேட்டுள்ளார்.
இதேவேளை, வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு இராணுவத்தினருக்கு நேரிடும் என இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க நேற்று எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொலிஸாருடன் வடக்கு மக்களும் இணைந்து செயற்ப்பட வேண்டும்!
வெளிவாரி பட்டதாரிகளையும் அரச சேவைக்கான பயிற்சிகளில் இணைத்துக் கொள்ள தீர்மானம்!
இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை!
|
|