இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கடும் வெப்பம்!
Friday, April 5th, 2019
இன்று(05) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேரடியாக சூரியன் உச்சங் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று(05) நண்பகல் 12.12 அளவில் திக்வெல்ல, கெகனதுர, கொடவில மற்றும் மிதிகம ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக சூரியன் உச்சங் கொடுக்கவுள்ளது.
இதேவேளை, வடமேல் மாகாணத்திலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இன்றையதினம் கடுமையான வெப்பநிலை நிலவும் என்று தெரிவிக்கப்படுகிறது.
வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளது.
Related posts:
50 இலட்சம் பெறுமதியான கடலட்டைகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது!
விடுவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பயன்தரும் மரங்கள் களவாடப்பட்டு வருவதாக மக்கள் கவலை!
குடாநாட்டில் திருட்டுக்கள் அதிகரிப்பு : அச்சத்தில் மக்கள்!
|
|
|


