இன்று சர்வதேச குடிசன தினம்!

Monday, October 3rd, 2016
சர்வதேச குடிசன தினம் இன்றாகும். ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதத்தின் முதலாவது திங்கட்கிழமை உலக குடிசன தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

30 வது சரவதேச குடிசன தினம் இம்முறை அனுஸ்டிக்கப்படுகின்றது. ‘வீட்டுத்திட்ட உதவிகளுக்கு முன்னுரிமை’ எனும் தொனிப்பொருளில் இம்முறை குடிசன தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

சர்வதேச குடிசன தினத்தினையொட்டிய தேசிய நிகழ்வுகள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொலன்னறுவை சுகலாதேவி கிராமத்தில் இடம்பெறவுள்ளது இன்று முதல் ஒரு வாரம் குடிசன வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

1985 ம் ஆண்டு ஜமெய்க்காவில் வைத்து அப்போதைய இலங்கைப் பிரதமர் ரணசிங்க பிரேமதாஸ முன்மொழிந்திருந்த யோசனையே உலக குடிசன தினம் பிரகடனப்படுத்தப்பட ஏதுவாக அமைந்ததாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக் விஜய சாகர கலன்சூரிய தெரிவித்தார். இதேவேளை தற்போது தேசிய ரீதியில் 12 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வீட்டுத் தேவை நிலவுவதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. மொத்த வீடமைப்பு கேள்வித் தொகையில் 20 வீதமானோர், வீடின்றி வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

world-habitat-day_31012

Related posts:


இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று – நான்காவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு பொது சுகா...
இலங்கை துறைமுக அபிவிருத்திக்கு தேவையான நவீன தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு பெல்ஜியம் அரசாங்கம் இணக்கம்...
இரண்டு உலங்கு வாநூர்திகளில் இருந்த 6 யுக்ரைனிய படையினர் கொலை - யுக்ரைன் இராணுவம் அறிவிப்பு!