இனந்தெரியாதோரால் இந்திய துணைத்தூதரகத்தின் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளது!

Tuesday, February 7th, 2017
யாழ். மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் பெயர்ப் பலகை சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அருகில் இருந்த கடைகளின் கதவுகளும் வாளால் வெட்டி சேதமாக்கப்பட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில கடை உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ். பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)

Related posts: